
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை மீட்பதற்கான விரிவான தொகுப்பை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாராகஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் தொழில் முதலீடு, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்கள், நிதியமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காணொலி வாயிலாகநேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில்நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்