
பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான கோவி. மணிசேகரன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 95.
வேலூர் மாவட்டம் சல்லிவன்பேட்டையில் 1927-ம் ஆண்டு மே 2-ம் தேதி கோவி.மணிசேகரன் பிறந்தார். தனது 16 வயது முதல் சுமார் 76 ஆண்டுகள் இலக்கியப் பணியாற்றி வந்த கோவி. மணிசேகரன் சென்னைகே.கே.நகரில் வசித்து வந்தார். இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக தனது 95-ம் வயதில் அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்