
புதுச்சேரி சட்டப்பேரவையில் மாநில அந்தஸ்து கேட்டு 12 தடவைக்கு மேல் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியும் இதுவரை நடவடிக்கையில்லை. இது புதுச்சேரி ஆளுகையை நாளுக்கு நாள் சிக்கலுக்கு இட்டுச் செல்கிறது.
புதுச்சேரியில் மக்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளை விட மத்திய அரசு நியமிக்கும் துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம் அதிகம். 25-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் இருந்தும், அவர்களுக்கும் மக்களுக்கும் தொடர்பே இல்லை. தமிழ் தவிர்த்து இதர மொழி பேசும் அதிகாரிகள் தலைமைச்செயலகம் தொடங்கி ஜிப்மர் மருத்துவமனை வரை இருக்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்