
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் இன்று (19-ம் தேதி) மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றுவதற்காக அண்ணாமலை உச்சிக்கு கொட்டும் மழையில் மகா தீப கொப்பரை நேற்று கொண்டு செல்லப்பட்டது.
காவல் தெய்வமான துர்க்கை யம்மன் உற்சவத்துடன் கடந்த 7-ம் தேதி தொடங்கிய கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள தங்கக்கொடி மரத்தில் கடந்த 10-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்