
தனியார் ஆலை விபத்தில் ஒரு கையை இழந்தாலும் மனம் தளராமல் சுயதொழில் தொடங்கி சாதனை புரிந்து வருகிறார் மண்பாண்டக் கலைஞர் ஆர்.வேல்முருகன்.
மதுரை, பரவையைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர் ஆர்.வேல்முருகன் (35). இவருக்கு மனைவி, 3 வயதில் ஒரு மகன், 2 வயதில் மகள் உள்ளனர். இவர் தனியார் கல்லூரியில் பி.காம். படிக்கும்போது கோச்சடையில் உள்ள தனியார் ஆலையில் வேலை கிடைத்தது. இதனால் படிப்பை பாதியில் நிறுத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்