
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் 10 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் 2 கி.மீ. தொலைவில் உள்ள திருப்புவனத்துக்கு 12 கி.மீ. தூரம் சுற்றி பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர்.
வைகை ஆற்றின் தென்பகுதியில் மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலை செல்கிறது. ஆற்றின் வடபகுதியில் திருப்புவனம் ஒன்றியத்தைச் சேர்ந்த கே.பெத்தானேந்தல், மணல்மேடு, கணக்கன்குடி, கருங்குளம், வெங்கட்டி, சடங்கி, பாப்பாகுடி உள்ளிட்ட 10 கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைத்துத் தேவைகளுக்கும் மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலை வழியாக திருப்புவனம் மற்றும் மதுரை செல்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்