Thursday, November 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/26/large/741052.jpgஅந்தமான் அருகே 29-ம் தேதி புதிய காற்றழுத்தம் உருவாகிறது; 3 நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்பு: தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும். தெற்கு அந்தமான் அருகே 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது:

தெற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிக்கிறது. இது, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று கருதப்பட்டது. ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை. 29-ம் தேதி தெற்கு அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அது, 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...