
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மரபுசாரா எரிசக்தி, சுரங்க நீர் தேக்கம், நீர்வழி போக்குவரத்து போன்ற தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்துவது காலத்தின் கட்டாயம் என பேரிடர் மற்றும் மேலாண்மைத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளில் தொழிற்சாலைகள், வாகனங்கள் அதிகரிப்பு, காடுகளின் நிலப்பரப்பு குறைந்து வருவது போன்றவற்றால் கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, அதன் காரணமாக புவியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதனால், அதீத வானிலை மாற்றம், துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்டவை ஏற்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்