
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்க பொறியியல் பட்டதாரி ஒருவர் தனது வேலையை விட்டுவிட்டு ஒரே சமயத்தில் 9 ரகங்களை நடவு செய்து சாதனை படைத்துள்ளார்.
காரைக்குடி அருகே ஓ.சிறுவயலைச் சேர்ந்தவர் முகேஷ் கண்ணன்(28). பொறியியல் பட்டதாரி. இவர்சென்னையில் தனியார் நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் பணிபுரிந்தார். பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்து வருவதை அறிந்த அவர், அவற்றை மீட்கவும், இளைஞர்களை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தவும் முடிவு செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்