
மேட்டூர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து வறண்ட 100 ஏரிகளுக்கு காவிரி நீரைக் கொண்டு செல்லும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக 4 ஏரிகளுக்கு உபரிநீர் கொண்டு செல்லும் பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் உபரிநீரை சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு கொண்டு செல்ல ரூ.565 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இப்பணிக்காக மேட்டூர் அணையின் இடதுகரை அருகே திப்பம்பட்டியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்