
ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, கடம்பூர் வனப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மலைக் கிராமங்கள் துண்டிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள தாளவாடி,கடம்பூர், பர்கூர் உள்ளிட்ட மலைப்பகுதியையொட்டி ஏராளமான கிராமங்கள் உள்ளன.பழங்குடியினர் மற்றும் இதர பிரிவினர் வசிக்கும் இந்த கிராமங்கள் வனப்பகுதிகளையொட்டி அமைந்துள்ளன. இந்த கிராமங்களை, அருகில் உள்ள நகரங்களுக்கு இணைக்கும் சாலைகள் வனப்பகுதியிலும், சிறிய ஓடைகளைக் கடந்தும் செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்