
திருப்பூர் அருகே சாய ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கியதில், ஆலையின் மேலாளர் மற்றும் தொழிலாளி உயிரிழந்தனர்.
திருப்பூர் வித்யாலயம் கொத்துக்காடு பகுதியில் தனலட்சுமி என்பவருக்கு சொந்தமான சாய ஆலை செயல்படுகிறது. இங்கு சாயக் கழிவுநீர் தேங்கும் 8 அடி ஆழமுள்ள இரு தரைதள தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. பழவஞ்சிபாளையத்தைச் சேர்ந்த வடிவேல் (32), நாகராஜ்(48), ராமகிருஷ்ணன் (50), ராஜேந்திரன் (52), பெண் தொழிலாளி ராமு (32) ஆகியோர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாய ஆலையின் மேலாளர் ராமநாதபுரம் மாவட்டம்,தேவிப்பட்டினத்தை சேர்ந்த தினேஷ் பாண்டியன் (28) மேற்பார்வையில் பணிகள் நடைபெற்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்