
சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 3 பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார். அவசியமின்றி பொதுமக்கள் யாரும் இன்று வெளியில் வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண் டுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் வட கடலோரம், டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும் நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்