
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அமைச்சர்களுடன் சென்று ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 9 நாட்களாக பெய்த தொடர் மழையால் சுமார் 20 ஆயிரம் ஏக்கர்விளைநிலங்கள் மழை தண்ணீரில் மூழ்கின. தாழ்வான குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் மழை இல்லாததால் விளைநிலங்களில் இருந்து மழை நீர் வடிந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்