
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் 4 தமிழ் எழுத்தாளர்கள், பிற இந்திய மொழிகளில் ஒரு எழுத்தாளர், ஆங்கில மொழி எழுத்தாளர் ஒருவர் என 6 பேருக்கு மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெயரிலான பொற்கிழி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த விருதுடன் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.
2020, 2021-ம் ஆண்டுகளுக்கான விருதுவழங்கும் விழா சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. 2020-ம் ஆண்டுக்கான விருதுகள் ந.முருகேசபாண்டியன் (உரைநடை), அ.மங்கை (நாடகம்), அறிவுமதி (கவிதை), பொன்னீலன் (நாவல்), ஆர்.பாலகிருஷ்ணன் (ஆங்கிலம்), சித்தலிங்கையா (கன்னடம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டன. 2021-ம் ஆண்டுக்கான விருதுகள் அபி (கவிதை), ராசேந்திரசோழன்(புனைவிலக்கியம்), எஸ்.ராமகிருஷ்ணன்(உரைநடை), வெளி ரங்கராஜன் (நாடகம்), மருதநாயகம் (ஆங்கிலம்), நதித் சாகியா(காஷ்மீரி) ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்