
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள கோயிலில் கடந்த ஒரு மாதத்தில் 3-வது முறையாக சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயிலின் உபகோயிலான பெரியசாமி, செங்கமலையார் கோயில்கள் அங்குள்ள காட்டுப் பகுதியில் உள்ளன. இவை இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. கடந்த அக்.6 அன்று பெரியசாமி கோயிலில் 10 அடி உயரம் உள்ள பெரியசாமி சிலை உட்பட 9 சிலைகள், செங்கமலையார் கோயிலில் 5 கன்னிமார்கள் சிலைகள் உட்பட சுட்ட மண்ணால் செய்யப்பட்ட 14 சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டு இருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்