
சேலத்தில் மசாஜ் சென்டர் நடத்திய வங்கதேச பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததும், அது அறிந்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, நடவடிக்கை எடுக்கத் தவறிய எஸ்ஐ உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
வங்கதேசத்தைச் சேர்ந்தவர் தேஜ்மண்டல்(27). இவர் சேலம் சங்கர் நகரில் மசாஜ் சென்டர் நடத்தி வந்தார். குமாரசாமிப்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் தேஜ்மண்டல் வீடு பூட்டப்பட்டிருந்தது. மேலும், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்