
ஏரி, குளங்கள், வரத்து வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள், ஓடை உள்ளிட்டவைகளை பருவ மழைக்கு முன்னரே திட்டமிடப்பட்டு, தூர்வாருதல், ஆழப்படுத்துதல் அவசியம்.
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழையின் போது கடலூர் மாவட்டம் பாதிப்புக்குள்ளாவது வாடிக்கை. ஒவ்வொரு ஆண்டும் ஆட்சியர் அலுவல கங்களில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியரால் உத்தரவு பிறப்பிக்கப்படுவது ஒரு சம்பிரதாய நிகழ்வாக நடந்து வருகிறது என்பதற்கு தற்போதைய வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மேற்கொள்ளும் பணிகள் ஒரு உதாரணம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்