
சங்கராபுரத்தில் உள்ள உணவ கத்தில் பார்சல் உணவு வாங்கிச்சென்றவர்கள் அதில் பல்லி இருப்பதை அறியாமல் உட் கொண்டு பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அங்குள்ள 3 கடைகளை 15 நாட்களுக்கு மூட உணவு பாதுகாப்பு துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்சங்கராபுரத்தில் உள்ள உணவகத்தில் கிடங்கன்பாண்டலத்தைச் சேர்ந்த சிவபாலன் என்பவர் கடந்த7-ம் தேதி பார்சல் உணவு வாங் கிச் சென்று வீட்டில் உணவு அருந்தியுள்ளார். உணவில் பல்லி விழுந்திருப்பதை அறிந்த நிலையில், வாந்தி மயக்கம் ஏற்பட்டுசங்கராபுரம் அரசு மருத்து வனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்