
சிவகங்கை மாவட்டத்தில் தொடர் வறட்சி, ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை, சீமைக்கருவேல மரங் கள் ஆகியவற்றால் மறைந்து போன விருசுழியாறு 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் செந்துறை, நத்தம் மலைப்பகுதிக ளில் உற்பத்தியாகும் பாலாறும், உப்பாறும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே இணைந்து பாலாறு என்ற பெயரில் திருப்பத்தூர் கண்மாயை அடைகிறது. அங்கி ருந்து விருசுழியாறாக மாறி கல்லல், தேவகோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் வழியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்