
சென்னை கிழக்கு தாம்பரம், கீழ்க்கட்டளை, கோவிலம்பாக்கம், காரப்பாக்கம், கொட்டிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்ட தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, பொதுமக்களுக்கு உணவு, நிவாரணப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து, தரமணி, வேளச்சேரி, தேனாம்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி உள்ளிட்டோருடன் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசு சரியாக திட்டமிடாததால்தான் சென்னையில் மட்டும் 523 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்