
திருவண்ணாமலையில் 2,668 அடி அண்ணாமலை உச்சியில் நாளை மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், நகருக்குள் வெளியூர் பக்தர்கள் அதிகம் வருவதை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 7-ம் தேதி துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. 10-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (நவ.19) அதிகாலை 4 மணியளவில் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணியளவில் கோயில் தீப தரிசன மண்டபத்தின் முன்பாக ஆணும், பெண்ணும் சமம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் அர்த்த நாரீஸ்வரர் காட்சியளிக்கும் நிகழ்வும், அதே நேரத்தில் 2,668 அடி அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்