
தமிழகத்தில் இனி வாரம் இரண்டு முறை கரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் இன்று அவர் கூறும்போது, “ தமிழக முதல்வர் ஸ்டாலின் இனி வாரத்திற்கு இரண்டு முறை கரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் இனி வாரம் இரண்டு முறை (வியாழன், ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்