
இந்திய எண்ணெய் நிறுவனத்தின் (ஐஓசி) கொச்சி சுத்திகரிப்பு ஆலையின் 79 சதவீத சந்தைப்படுத்துதல் உரிமையை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்க1991-ல் மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்தத் தருணத்தில் ஐஓசி நிறுவனத்தையும், தொழிலாளர்களையும் காக்க களமிறங்கினார் இந்தியன் ஆயில் ஊழியர் சங்கத்தின் (ஐஓஇயூ) பொதுச்செயலாளர் டி.எஸ்.ரெங்கராஜன். அன்றைய பெட்ரோலியத் துறை அமைச்சர் குருபாதசுவாமியையும், செயலாளர் சங்கரானந்தா ஆகியோரையும் நேரில் சந்தித்து மத்திய அரசின் முடிவை திரும்பப் பெற வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்