
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.2.16 கோடி கைப்பற்றப்பட்டது.
கடந்த 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் பி.தங்கமணி. தற்போது குமாரபாளையம் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார். அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.85 கோடிக்கு சொத்து சேர்த்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி (60), அவரது மனைவி டி.சாந்தி (56), மகன் டி.தரணிதரன் (32) ஆகியோர் மீது நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்