
பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு நகரில் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வேலூர் விஐடி பல்கலைக்கழக பேரிடர் மேலாண்மை துறை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி அதிகாலை 4.17 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது என்றும் அது வேலூரில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் தெற்கு, தென் மேற்கு பகுதியில் ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் அறிவித்தது. மேலும், இந்த நில அதிர்வு பூமிக்கு அடியில் 25 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்