
சென்னை: உயர் நீதிமன்ற ஆன்லைன் விசாரணையின்போது இளம்பெண்ணுடன் ஒழுங்கீனமாக செயல்பட்ட வழக்கறிஞர் மீது உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளது. அந்த வழக்கறிஞர் தொழில் புரிய தடை விதித்து பார் கவுன்சிலும் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் ஆன்லைன் மூலமாக காணொலி காட்சியில் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது வழக்கு விசாரணைக்காக ஆன்லைனில் காத்திருந்த வழக்கறிஞர் ஒருவர் திடீரென இளம்பெண் ஒருவருடன் ஒழுங்கீனமாக செயல்படும் வீடியோ காட்சி உயர் நீதிமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்