
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் மலைக் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று சுவாமி தரிசனம் செய்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். பின்னர், மலையடிவாரத்தில் உள்ள பக்தவச்சலேஸ்வரர் கோயிலில் ஆய்வு செய்தார். கோயிலில் இருந்த பக்தர்களிடம், அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, மலைப் பாதையை சீரமைக்கவும், கோயிலின் முன்பும் சந்நிதி தெருவிலும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பக்தர்களிடம் உறுதியளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்