
சென்னை: பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க,வெளிநாடுகளில் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை திட்டம் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் வெளிநாடு சென்று உயர்கல்வி பயிலுவதற்கான கல்வி உதவித் தொகை திட்டம் கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் வெளிநாட்டில் படிப்பதற்கான அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட டிஓஇஎப்எல் (TOEFL), ஐஇஎல்டிஎஸ் (IELTS), ஜிஆர்இ (GRE), ஜிஎம்ஏடி (GMAT) தேர்வுகளில் தேர்ச்சி பெறத் தேவையான பயிற்சிகள் திட்டப் பகுதி-1-ன் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும். அதேபோல, தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விரும்பியநாட்டில் மேற்படிப்பைப் பயிலுவதற்குத் திட்டப்பகுதி-2-ன் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்