
சென்னை: தமிழகத்தில் மதிப்பு கூட்டப்பட்ட விவசாய விளைபொருட்களுக்கு பொதுவான வணிக முத்திரையை உருவாக்கும் பணியில் வேளாண் விற்பனைத் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
விவசாய விளைபொருட் களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பதுதான் விவசாயிகளின் நீண்டகால மனக்குறையாக இருந்து வருகிறது. வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நேரத்தில் தக்காளி, பப்பாளி, பால் போன்றவற்றை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். இத்தகைய நிலையைத் தடுத்து, வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்