
சென்னை: இணைய குற்ற வழக்குகளில் விரைவாகவும், துல்லியமாகவும் துப்புதுலக்கும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக சென்னையில் அதிநவீன சைபர் தடய ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடி செய்தல், தகவல் தொழில்நுட்ப சேவைகளை முறைகேடாகப் பயன்படுத்தல், இணையம் மூலம் ஏமாற்றுதல், கணினிமற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களிலிருந்து தகவல்களைத் திருடுதல், மற்றவர்களின்தகவல்களையோ, புகைப்படங்களையோ தவறாகப் பயன்படுத்துவது, மின்னஞ்சல் மற்றும் இன்டர்நெட் கால் மூலம் மிரட்டுவது, இணையவழி பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்