
தாம்பரம் அருகே வரதராஜபுரத்தில் ஆஞ்சநேயர் கோயிலை இடிக்க பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் சிலர் கோயில் கோபுரத்தின் மீது நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் அருகே வரதராஜபுரத்தில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுஉள்ளதாக கூறி, வருவாய்த் துறை மற்றும் நீர்வள ஆதாரத் துறையினர் கோயிலை இடிக்க முடிவு செய்து, கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்கினர். இதற்கு, நிர்வாகிகள், பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்