
ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் மரணம் அடைந்தது குறித்துசர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்ட பாகிஸ்தான் அமைப்பினர் மீது தமிழக சிபிசிஐடிபோலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், கடந்த 8-ம் தேதி புதன்கிழமை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவ்விபத்தில் பிபின் ராவத்,அவரது மனைவி, மூத்த ராணுவ அதிகாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்துபாகிஸ்தானை சேர்ந்த அமைப்பினர் சிலர் தங்கள் ட்விட்டர் கணக்குகளில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டனர். அந்தஅமைப்பினர் மீது தமிழக சிபிசிஐடிபோலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்