
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் தலைவர்கள், ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்துப் பேசினர்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாநிலச் செயலாளர் டால்பின் தரன், பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் கராத்தே தியாகராஜன், கு.க.செல்வம் ஆகியோர் நேற்று மாலை சந்தித்துப் பேசினர். 30 நிமிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நீடித்தது. சமூக ஊடகங்களில் திமுக அரசுக்கு எதிராக கருத்துகளை பதிவிடும் பாஜக நிர்வாகிகள், ஆதரவாளர்கள் பொய் வழக்குகளால் கைது செய்யப்படுவதாகவும், இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்