
கரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என்று ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, உருமாறிய கரோனா வைரஸான ‘ஒமைக்ரான்’ அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்