
மத்திய செம்மொழி தமிழாய்வுநிறுவனம் சார்பில் சங்க இலக்கிய நூல்கள் முதல்முறையாககன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
தமிழ் செவ்வியலின் சிறப்பை உலகம் முழுவதும் கொண்டும் செல்லும் நோக்கில், மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன்படி, ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியம் சீனம், ஜப்பானீஸ், கொரியன் உள்ளிட்ட 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அதேபோல, திருக்குறளை 58 பழங்குடியினர் மொழிகள் உட்பட 120-க்கும்மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கும் பணியை செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், 9 சங்கஇலக்கிய நூல்கள் முதல்முறையாக கன்னட மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்