
ரங்கம் ரங்கநாதர் கோயிலில்வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நேற்று அதிகாலை நடைபெற்றது. நம்பெருமாள் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் தரித்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாடிச.3-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து திருநாள் 4-ம் தேதி தொடங்கிடிச.13-ம் தேதி வரை நடைபெற்றது. பகல் பத்து திருநாளின் 10-ம் திருநாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்