Wednesday, December 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/16/large/747683.jpgபாகிஸ்தானுக்கு எதிரான போரில் நூலிழையில் உயிர் தப்பினோம்: ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி கணபதி பேட்டி

சென்னை: பாகிஸ்தானுக்கு எதிரான போரில்வெற்றி கிடைத்தாலும் ஏராளமான இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். அதேநேரம், அப்போரில் உற்சாகமாக பங்கேற்று வெற்றிகரமாக கொண்டாடிய பல வீரர்கள்உள்ளனர். அந்த வகையில், சென்னையில் வசிக்கும் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியான கமாண்டர் ஆர்.கணபதியும் ஒருவர். போரில் பங்கேற்றது குறித்து அவர் தனது நினைவலைகளை நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார்.

நான் 1929-ம் ஆண்டு சென்னையில் பிறந்தேன். பிஎஸ்சி பட்டப் படிப்பு படித்தேன். எனது உறவினர்ராமசாமி அளித்த ஊக்கத்தின் பேரில், கடந்த 1954-ம் ஆண்டு கடற்படையில் சேர்ந்தேன். பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2 போரில் பங்கேற்றேன்.1965-ம் ஆண்டு நடைபெற்ற போரின்போது நான் ஐஎன்எஸ்பிரம்மபுத்ரா போர்க் கப்பலில் துப்பாக்கி பயிற்சி அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். பாகிஸ்தானுக்கு எதிராக சண்டையிட ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பல் கிழக்கு வங்காள விரிகுடா கடலில் பயணித்தது.அதற்கு பாதுகாப்புக்காக ஐஎன்எஸ்பிரம்மபுத்ரா கப்பல் உடன் சென்றது. அப்போது, அமெரிக்க போர்விமானங்கள் கிழக்கு கடற்பகுதியில் திடீரென பறந்து வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...