
பொறியியல் மாணவர்களுக்கு தொழில்முனைவு மேம்பாட்டு பயிற்சி அளிப்பது தொடர்பாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்துடன் அண்ணா பல்கலைக்கழக தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது துணைவேந்தர் வேல்ராஜ் பேசியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏராளமான ஆய்வுகள் நடைபெறுகின்றன. புதிய கண்டுபிடிப்புகள் வணிகரீதியிலான தயாரிப்புகளாக வெளியே வரவேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் தொழில்முனைவு சிந்தனையை ஏற்படுத்த வேண்டும். அடுத்த10 ஆண்டுகளில் அறிவுசார் பொருளாதாரம்தான் முன்னணியில் நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்