
திருப்பூர்: நூல் விலை உயர்வையும், பஞ்சு பதுக்கலையும் தடுக்கக் கோரி ஜனவரி 17, 18-ம் தேதிகளில் பனியன் நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெறும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று போராட்டம் தொடங்கியது.
பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளான, நூல்விலை கடந்த ஓராண்டாக உயர்ந்துவருவதால், தொழில் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஜனவரி மாதத்தில் நூல் விலை ஒருகிலோவுக்கு ரூ.30 உயர்ந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்