
மதுரை: மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் உட்பட 3 ஊர்களில் ஜல்லிக்கட்டை பலரும் பாராட்டும் வகையில் சிறப்பாக நடத்திய அமைச்சர்பி.மூர்த்தியை முதல்வர் ஸ்டாலின் மற்றும் விழாக் குழுவினர் பாராட்டினர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னின்று நடத்திய அமைச்சர் பி.மூர்த்தியை முதல்வர் ஸ்டாலின், திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி, ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் பாராட்டினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்