
சென்னை: முழு ஊரடங்கின்போது சென்னையில் தேவையின்றி இயக்கப்பட்ட 929 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமை தளர்வுகளற்ற முழு ஊரடங்கும் அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து கண்காணிப்பை போலீஸார் அதிகப்படுத்தியுள்ளனர். 10 ஆயிரம் போலீஸார் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்