
சென்னை: குறும்படம் எடுக்க பணம் தேவைப்பட்டதால், தந்தையிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் கடத்தல் நாடகமாடிய மகனை போலீஸார் மீட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் பென்சிலய்யா (54). இவர் வடபழனி காவல் நிலையத்தில் அண்மையில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், ‘கடந்த 13-ம் தேதி காலை தனது மகன் கிருஷ்ணபிரசாத் (24) வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகத்துக்கு சென்றதாகவும், அதன் பின்னர் காணவில்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்