
தாம்பரம் மாநகராட்சியின் முதல்மேயர் பதவிக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில், பெண் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விரைவில் அரசிதழில் அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்துப் பணிகளும் தேர்தல் ஆணையம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து செய்கின்றன. வார்டு வரையறை செய்தல், வாக்காளர் பட்டியல் வெளியீடு, இட ஒதுக்கீடு, ஆண் - பெண் வார்டு பிரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் அரசியல் கட்சியினரும் வேகம்காட்டி வருகிறார்கள். திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தனித்தனியே தங்களது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்