
விருதுநகர்: கடந்த அதிமுக ஆட்சியில் வேலை வாங்கி தருவதாக ரூ.3.1 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் தனிப்படை போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
3 மணி நேரம் விசாரணை: இந்நிலையில் அவர் நள்ளிரவு 1.15 மணியளவில் விருதுநகர் அழைத்துவரப்பட்டார். அவரிடம் மதுரை சரக காவல்துறை டிஐஜி காமினி, மாவட்ட எஸ்.பி. மனோகர் உள்ளிட்ட காவல்துறையினர் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் அவர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவர் இன்று காலை விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்