
டிஜிட்டல் மயமாகும் பணிகளை புதுச்சேரி சட்டப்பேரவைத் தொடங் கியுள்ளது. காகிதமில்லா பட்ஜெட் தாக்கலாகவுள்ளது.
“புதுச்சேரி சட்டப்பேரவை விரைவில் டிஜிட்டல் மயமாக்கப் பட்டு, காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று சட்டப்பேரவை தலைவர் செல்வம் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சி யாக நேற்று தேசிய ‘இ-விதான் அப்ளிகேஷன்’ மூலம் சட்டப் பேரவை நடவடிக்கைகள் கணிணி மயமாக்க முன்னோடி செயல் திட்ட அறிக்கை தயாரித்திடவும், சட்டப்பேரவையில் தற்போதுள்ள வசதிகள் குறித்தும் தேசிய ‘இ-விதான்’ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது சட்டப்பேரவை தலைவர்செல்வம், புதுச்சேரி மாநிலங்க ளவை உறுப்பினர் செல்வகணபதி, சட்டப்பேரவைச் செயலர் முனிசாமி மற்றும் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த மனோஜ், அருண், விஜய சாரதி, இராமனுஜம் ஆகியோர் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள வசதிகளை மேற்பார்வையிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்