
புதுக்கோட்டை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கார் பரிசு பெற்ற ‘புல்லட்’ காளைக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியைச் சேர்ந்தவர் எம்.தமிழ்ச்செல்வன்(57). மதுரை மாவட்டம்அலங்காநல்லூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், இவருக்குச் சொந்தமான ‘புல்லட்’காளை, யாருக்கும் பிடிபடாமல் களத்தில் நின்று விளையாடி, மாடுபிடி வீரர்களுக்கு மிரட்சியை ஏற்படுத்தியதுடன், ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்தது. இதனால்,சிறந்த காளைக்கான முதல் பரிசான காரையும் பெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்