
கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால் பிரதமர் மோடியின் விருதுநகர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா ஜனவரி 12-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விழா விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியைத் திறந்துவைப்பதோடு, அங்கிருந்தபடியே காணொலிக் காட்சி மூலம் தமிழகத்தில் உள்ள மற்ற 10 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளையும் திறந்துவைப்பதாக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்