
சென்னை: கரோனா பொது முடக்கம் மட்டும் அல்லாமல் தொடர்ந்து, பணிகளுக்கு இடையே சாலையோர சிறுமிகளுக்கு போக்குவரத்து காவலர் ஒருவர் கணக்கு பாடம் சொல்லி கொடுத்து வருவது வரவேற்பை பெற்றுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முழு அளவில் இயங்கவில்லை. இந்நிலையில், சென்னை பாரிமுனையில் சாலையோரத்தில் வசித்து வரும் மாநகராட்சி பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவி தீபிகாவுக்கு, சென்னை பூக்கடை காவல் நிலைய போக்குவரத்து காவலர் மகேந்திரன் கணக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அவரை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்