
சென்னை: தமிழகத்தில் 3-வது வாரமாக நேற்றுமுழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கரோனா பாதிப்பின் தீவிரத்தை பொதுமக்கள் உணர்ந்ததால், வெளியில் செல்வதை தவிர்த்து, வீட்டுக்குள்ளேயே இருந்தனர்.
தமிழகத்தில் கரோனா, ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த ஏற்கெனவே இருந்த ஊரடங்கு தளர்வுகள் குறைக்கப்பட்டு, ஜன.6முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அன்று முதல்இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஜன.9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜன.16-ம் தேதி ஞாயிறன்றும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்